உள்நாடு

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் – 04 பேர் காயம்

(UTV |  கம்பஹா) – இன்று காலை இனந்தெரியாத குழுவினரால் நடத்திய தாக்குதலில் ராகம மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் மூவர் ராகம வைத்தியசாலையிலும் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ராகம மருத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

 ஹிஸ்புல்லாஹ் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

“சர்வதேச சமூகம் விரும்பும் விதத்தில் நாங்கள் கைதிகள் பற்றி முடிவுகளை எடுப்பதில்லை”