உள்நாடு

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 181 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) –ரஷ்யாவில் சிக்கியிருந்த மேலும் 181 இலங்கையர்கள் இன்று (25) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் ரஸ்யாவின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 1206 இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்துள்ள 181 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கு முதல் கடந்த 22 ஆம் திகதி ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கியிருந்த 260 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

Related posts

இதுவரை 298,162 பேர் பூரண குணம்

பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு புதிய குழு நியமனம்

நேபாளம் சென்றார் கோட்டாபய ராஜபக்ஷ

editor