உள்நாடு

ரயில் தடம்புரள்வு – வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

(UTV|கொழும்பு) – வடக்கு நோக்கிய புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு(16) கொழும்பு, கோட்டையிலிருந்து தலைமன்னார் வரை பயணித்த புகையிரதம், செனரத்கம பகுதியில் தடம்புரண்டமை காரணமாக இவ்வாறு புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக, வடக்கு புகையிரத மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள், கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிரத கட்டுப்பாட்டறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா, உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறவும்

இலங்கையில், 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும்!!

தனிமைப்படுத்தல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் – GMOA எச்சரிக்கை