உள்நாடு

ரயில் என்ஜினில் தீ விபத்து

(UTV|கொழும்பு) – மொரட்டுவையிலிருந்து மருதானை நோக்கி கடலோரப் பாதையில் பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7.50 மணிக்கு மொரட்டுவையிலிருந்து புறப்பட்ட 325  ரயிலின் இயந்திரத்திலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தீயணைப்பு துறையினரின் உதவியோடு கொள்ளுபிடிய ரயில் நிலையத்தில் வைத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் நான்காவது மரணமும் பதிவு

கொழும்பு நீலச் சமர் கிரிக்கெட் போட்டி- பார்வையிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்

editor