உள்நாடு

ரயில் ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நாட்களுக்கான ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடம்பெறமாட்டாது என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கான ஆசன பதிவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூர சேவை ரயில்களை உரிய வகையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளனர்.

இதன் காரணமாக ரயில்வே பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்வரும் நாட்களுக்கான முன்கூட்டிய ஆசன பதிவுகளை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

தனது இல்லத்தில் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்ற – ஆசிரியர் கைது!

வீடியோ | எரிபொருள் விலைகள் குறையும் – பாராளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயக்கொடி

editor

சுமார் 11 வருடங்களின் பின்னர் நீர் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது