உள்நாடு

ரணில் பிரதமர் பதவியினை கோரவில்லை – UNP

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது கட்சியோ தேசிய அரசாங்கத்தையோ அல்லது பிரதமர் பதவியையோ கோரவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி ஊடக அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

மாறாக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஒரு தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தும் பணிகள்

பிரதமர் தலைமையில் நாளை விஷேட கலந்துரையாடல்

இந்தியன் இழுவை மடி படகையும் உள்ளூர் இழுவைமடி படகுகளையும் தடுக்க கோரி யாழில் மீனவர்கள் போராட்டம்….!