அரசியல்உள்நாடு

ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம்

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (25)  இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பிற்பகல் 2 மணிக்கு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டுக்கு கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடாமல், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட முன்வந்திருக்கும் பிரேரணையை இதன் போது அனுமதித்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த விசேட சம்மேளனத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் இரத்துச் செய்யப்படும் – முசலியில் பிரதமர் ஹரிணி

editor

புத்தளத்தில் ஒரு தொகை மஞ்சள் மீட்பு.