உள்நாடுபிராந்தியம்

யாழ். குருநகரில் துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்தத்துப்பாக்கி பயன்படுத்தக் கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியிலேயே ரி- 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

Related posts

சீரற்ற காலநிலையினால் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் படகு சேவை இடம்பெறாது

editor

கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்தினுள் தடுப்பூசி

வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு