உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் , 30 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 18 , 22 மற்றும் 23 வயதான நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-பிரதீபன்

Related posts

குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி

editor

தமிழ், சிங்களப் புத்தாண்டு – அரசின் புதிய சட்டதிட்டங்கள்

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்