முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மூன்று ஜீப்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, மோட்டார் போக்குவரத்துத் துறையில் போலி எண்களின் கீழ் பதிவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.