உள்நாடு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – மேலும் 15 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று(22) காலை நாட்டை வந்தடைந்துள்ளன.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் நெதர்லாந்தில் இருந்து துபாய் ஊடாக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 648 என்ற விமானத்தில் அவை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தடுப்பூசிகள் தற்போது இலங்கை மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – பிரதமர் ஹரிணி

editor

போலியான செய்திகளை பதிவிட்ட நபர் கைது

சம்மாந்துறையில், பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு!