உள்நாடு

மூதூரில் நாளை நீர் துண்டிப்பு.

மூதூர் நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபை சில பகுதிகளில் அவசர திருத்த வேலை மேற்கொள்ள இருப்பதால் நாளை (04) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மூதூர் மற்றும் அதைச் சூழ்ந்துள்ள பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் மக்கள் தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், திருத்த பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக நீர் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மூதூர் நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகின்றது.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

திலீபனின் எழுச்சி ஊர்தி 2ஆம் நாள் பயணம் ஆரம்பம்!

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளை முதல்

கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்