உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று (06) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து – புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது அதில் ஒரு மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றும் ஒருவர் காயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தடுப்பூசி பெற்றோரின் எண்ணிக்கை இலட்சத்தினை தாண்டியது

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

editor

பராட்டே சட்டம் மீண்டும் அமுலில் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor