அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதி ரணில் எம்பியாகிறார்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகுவார் என்றும், இதனால் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அந்த இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உட்பட பல கட்சிகள் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு – விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

editor

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

ரணிலை நேரில் சந்தித்து, இறுதி தீர்வு கட்டப்போகும் சம்மந்தன்!