அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி செங் ஹாங்கிற்கும் இடையில் கொழும்பு புளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் சர்வதேச மட்டத்திலான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கும் சீனத் தூதுவருக்கும் இடையிலான கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கொழும்பில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதுவருடன் இதேபோன்ற கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

சீனத் தூதுவர் எதிர்காலத்தில் மற்றொரு பிரபல முன்னாள் அரசியல்வாதியுடனும் கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கோப் குழுவின் தலைவரானார் நிஷாந்த சமரவீர 

editor

சிறைத்தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

editor

கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தில் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

editor