முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை (13) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
சுமார் 5 மணி நேர வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றில் இடம்பெற்ற மோசடி தொடர்பில், வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்தார்.