அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி விமல் வீரவன்சவை கைது செய்யக் கோரும் தேசிய மக்கள் சக்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தேசிய மக்கள் சக்தி, சமீபத்தில் கைது செய்யப்பட்ட ‘புவக்தண்டாவே சனா’வுடன் தேசிய மக்கள் சக்திக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி சமீபத்தில் தெற்குக்கு விஜயம் செய்தபோது அந்த நபரின் வீட்டில் சாப்பிட்டதாக வீரவன்ச கூறியதாக பிரதியமைச்சர் ருவான் செனரத் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

விமல் வீரவன்ச கூறியது போல், ஜனாதிபதியோ அல்லது வேறு எந்த தேசிய மக்கள் சக்தித் தலைவரோ அந்த நபரின் வீட்டுக்குச் செல்லவும் இல்லை அங்கு உணவு உட்கொள்ளவுமில்லை என்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக வீரவன்ச மீது தேசிய மக்கள் சக்தி சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்திக்கு ‘புவக்தண்டாவே சனா’வுடன் எந்த தொடர்பும் இல்லை.

ஜனாதிபதியோ அல்லது வேறு எந்த தேசிய மக்கள் சக்தித் தலைவரோ அவரது வீட்டுக்குச் செல்லவில்லை.

விமல் வீரவன்சவைக் கைது செய்து அவரது அறிக்கை குறித்து விசாரணை நடத்துமாறு சிஐடியிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

ராஜபக்ஷக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்ப சிலர் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட முயற்சிக்கின்றனர் என்று பிரதியமைச்சர் கூறினார்.

Related posts

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸாவில் கடமை புரியும் 2 மௌலவிகள் கைது

editor

எரிபொருள் விலைகளில் மாற்றம்

editor

போலி டொலர்களுடன் 45 வயதுடைய நபரொருவர் கைது

editor