அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பியின் டிபெண்டர் விபத்தில் சிக்கியது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிபெண்டர் வாகனம் நேற்று (25) விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின்னர் பிரதேசவாசிகளுக்கும், டிபெண்டர் வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இரு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாகனத்தில் பல்வேறு ஆயுதங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts

உள்ளூராட்சித் தேர்தல் – மொட்டு கட்சிக்குள் விசேட கலந்துரையாடல்

editor

உயர் தரப் பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கம்பஹா பபா வழங்கிய தகவல் – பெருமளவான தோட்டாக்கள் மீட்பு

editor