போலியான தகவல்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற்று இலங்கையில் தங்கியிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீதான வழக்கை, ஜூலை 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த
வழக்கு ஆகஸ்ட் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிசித் அபேசூரிய, பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் ஷானக ரணசிங்க, ஜூலை 31 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குக்கு ஆஜராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சட்டத்தரணி நிசித் அபேசூரிய தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.