2016 ஆம் ஆண்டு கவனக் குறைவாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்து தொடர்பான ஆதாரங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பெப்ரவரி 12 ஆம் திகதி மேலும் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கின் சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மேலும் சாட்சிய விசாரணை பெப்ரவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி ராஜகிரிய பகுதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்து ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதி தினும் துசித குமார மற்றும் வெலிக்கடை பொலிஸின் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
