விளையாட்டு

முதல் போட்டியில் இருந்து பாபர் அசாம் விலகல்

(UTV | நியூசிலாந்து) –  நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பாபர் அசாம் விலகியுள்ளார்.

டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

டி20 தொடர் முடிந்த பின்னர் முதல் டெஸ்ட் 26 ஆம் திகதியும் 2-வது போட்டி ஜனவரி 3 ஆம் திகதியும் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில் பாபர் அசாமுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் அவர் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனது ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கத்தின் விலையை வௌியிட்டார் சுசந்திகா!

2011 அணிக்கு இருந்த பிரதான பிரச்சினை மெத்யூஸ் : இன்னும் வீரர்கள் சட்ட ரீதியாகவே அழைக்கப்பட்டனர்

நோவக் ஜோகோவிச் இற்கு ஆஸி’யில் தங்க அனுமதி