சூடான செய்திகள் 1

முதல் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி

(UTV|COLOMBO) சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜெயசேகர புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி என்பன இணைந்து புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமானது.

பேச்சுவார்த்தை நிறைவில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாகவும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

 

 

 

Related posts

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

சந்திரிக்கா மீதான குண்டுத்தாக்குதல் – 22 வருடம் சிறையிலிருந்த ஐயர் மன்னிப்பில் விடுதலை

இலங்கையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு இழப்பீடு மறுப்பு