உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்

(UTVகொழும்பு)- இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அன்றைய தினம் பொதுமக்கள் பார்வைகூடம் திறக்கப்படமாட்டாது என பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பொதுமக்களை பாராளுமன்றத்திற்கு அனுமதிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் தற்போது இணையத்தளம் முறைமை ஊடாக தங்களது தகவல்களை வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும் வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது..!

அம்பிட்டிய தேரர் சரணடைந்த பின் பிணையில் விடுவிப்பு

editor