சூடான செய்திகள் 1வணிகம்

மீன் விற்பனைக்கு கையடக்க தொலைபேசியில் செயலி

(UTVNEWS | COLOMBO) -இணைய மூலமான மீன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கையடக்க தொலைபேசி வழியாக மீன்கள் வாங்குவதற்கு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த தமிழக மீன்வளத்துறை முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரி தெரிவிக்கையில் பயன்பாட்டில் உள்ள இணைய தளத்தை வழக்கமான வாடிக்கையாளர் மட்டும்தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், கையடக்க தொலைபேசியில் ஒரு செயலி இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. இதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

Elon Muskயின் ஸ்டார்லிங்க் சேவை – 3மாதங்களில் இலங்கைக்கு வரும் : அரசு