உள்நாடுவிளையாட்டு

மீண்டும் பானுக இலங்கை அணியில்

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ மாற்றிக் கொண்டுள்ளார்.

முன்னதாக, பானுக ராஜபக்ஷ தனது பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கும் பானுக ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று (12) அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மனசாட்சியுடன் நாட்டை வழிநடத்தும் இளைஞர் தலைமுறையை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் – திங்கட்கிழமை முதல் ஆரம்பம்

editor

62 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை நிகழ்த்திய கும்பல் கைது!