உள்நாடு

மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு சம்பவம்; துப்பாக்கிதாரி கைது

(UTV | கொழும்பு) – மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

MMDA சட்டமூலம் தொடர்பில்: முஸ்லிம் எம்பிகள் கையளித்தவை என்ன ? முழு அறிக்கை இதோ

சமன் லால் CID இனால் கைது

நாடளாவிய திரையரங்குகள் 2ஆம் திகதி திறக்கப்படும்