உள்நாடுபிராந்தியம்

மினுவாங்கொடையில் போதைப்பொருட்களுடன் 37 வயதுடைய ஒருவர் கைது

மினுவங்கொட பொலிஸ் பிரிவின் உன்னாருவ பகுதியில் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (06) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படை கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தூக்கில் தொங்கிய  தாயின் கால்களை பிடித்துக்கொண்டு அழுத ஒன்றரை வயது குழந்தை!!

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவிப்பிரமாணம்

யோஷித ராஜபக்ஷ, டேஸிக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

editor