சூடான செய்திகள் 1

மாலபே பகுதியில் துப்பாக்கி பிரயோகம்

(UTV|COLOMBO)-அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலபே, ஜோதிபால மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜோதிபால மாவத்தை, 14 ஆவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீதோ இன்று அதிகாலை 2.40 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி பிரயோகத்தில் எவ்வித உயிராபத்துக்களும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரி 56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலமே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜேவர்தன