அரசியல்உள்நாடு

மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்கள் அணிதிரள வேண்டும் – சஜித் பிரேமதாச

இலங்கை தற்போது சோதனைக் கட்டத்தில் இருந்து வருகிறது. உலக வங்கி தற்போது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3.5% லிருந்து 3.1% ஆக திருத்தங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.

இது மீட்சி நிலையல்ல. மாறாக இது நாட்டின் தேக்கநிலையை குறித்து காட்டுகின்றன.

இந்தப் புள்ளிவிவரங்கள் சாதகமானதாக இல்லை என்பதால், நாம் இது குறித்து அவதானத்தோடு இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டின் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் அமைதி, புயலுக்கு முந்தைய அமைதியைப் போன்றதாகும். நமது நாடு இன்னும் ஒரு பெரிய கடன் மலையில் சிக்கித் தவிக்கிறது.

இந்த சலுகை காலம் 2028 இல் முடிவடைகின்றன. எனவே அன்றிலிருந்து நாம் மீண்டும் கடனை செலுத்த வேண்டியுள்ளது.

இதற்காக, ஒரு நாடாக நாம் ஒரு ஆழமான மாற்றத்தை ஆரம்பிக்கவில்லையென்றால், நாடு மீண்டும் இரண்டாவது முறையாக வங்குரோத்து நிலையை அடையும். இந்த அவதானம் குறித்து நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (22) மாலை ஆரம்பமாகிய Teen Business Summit 2025 நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாடு மீண்டும் ஒருமுறை வங்குரோத்தடைந்து விடாமல் இருக்க இந்த தருணத்திலிருந்தே நாம் உரிய நடவடிக்கைகளை சரியான முறையில் எடுத்து பயணிக்க வேண்டும்.

இதற்கென புதியதொரு தேசிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த மாற்றம் பழைய அதிகார கட்டமைப்புகளிலிருந்து நிகழாது, புதிய தலைமுறையிலிருந்து நிகழ வேண்டும்.

இந்த நோக்கத்திற்காக, பழைய பொருளாதாரக் கோட்பாடுகளை மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக அவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.

இவ்வாறு, சூரிய சக்தியால் வடக்கில் இயங்கும் நுண் நிதி முயற்சியாண்மைகள், கிழக்கில் பெண்கள் தலைமையிலான விவசாய தொழில்நுட்ப மையங்கள், உலக சமூகத்திற்கு ஏற்றுமதி செய்யும் ஆடை உற்பத்தி வேலைத்திட்டங்கள், வசதி குறைந்த கிராமப்புற-நகர்ப்புற தோட்ட சமூகங்களை இணைக்கும் தீர்வுகள், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் உயர் தொழில்நுட்பங்களில் ஒரு நாடாக நாம் கவனம் செலுத்த வேண்டும். இவை வெறும் கனவுகளாக மட்டும் இருந்து விடக்கூடாது. மாறாக புதியதொரு தேசிய மூலோபாயமாக அமைந்து காணப்பட வேண்டும்.

உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பிராந்தியங்களில் ஒன்றான ஐரோப்பிய சந்தைக்கான நுழைவாயிலாக இருக்கும் GSP+ ஐ இலங்கை நாடானாது நிலையான முறையில் பேணிச் செல்வது அவசியமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு செயல்திறன் மிக்க நிர்வாக அரசாளுகை, நல்லாட்சி, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பேணிச் செல்லல் ஆகிய அம்சங்களை நாம் பேணி வர வேண்டும்.

மேலும், நமது தேசிய எல்லைகளுக்கு அப்பால் இருந்து வெளிப்படும் ஆபத்துகள் குறித்தும் நாம் தெளிவாகக் கண்காணித்து வர வேண்டும். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான அண்மைய மோதல் உலகளாவிய பாதுகாப்பைப் பாதிக்கிறது.

இது பரந்த பிராந்திய மோதலாக விரிவடைந்தால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கிற்கு மட்டும் மட்டுப்பட்ட ஒன்றாக அமைந்து காணப்படாது.

இது உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஆகவே, இது குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

நார்கோர்டிக் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

வேலையற்ற பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க நடவடிக்கை

பாராளுமன்ற பெண் ஊழியர்களின் ஆடையில் மாற்றம்!