உள்நாடு

மாணவிகள் துஷ்பிரயோகம்- இராணுவ சிப்பாய் கைது

(UTV |நோர்வூட்) –  மாணவிகள் துஷ்பிரயோகம்- இராணுவ சிப்பாய் கைது

பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சந்தேகநபர், விடுமுறையில் வீடு திரும்பிய நிலையில், இரண்டு மாணவிகளை தேயிலைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்போது, அவர்களில் ஒரு சிறுமி சந்தேகநபரிடமிருந்து தப்பிச் சென்ற நிலையில், அதனை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேகநபரை மடக்கிபிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவிகளின் தந்தை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், குறித்த சிறுமிகள் இருவரும் டிக்கோயா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணிபுரிபவர் என்பதுடன் அவர் இன்று (15) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

17 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றம் – புதிய சபாநாயகர் யார் ?

editor

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைப்பதற்கு ஏற்ற அறிவு அரசாங்கத்திற்கு இல்லை – ரணிலின் தொங்கு பாலத்தில் தான் இந்த அரசும் நடைபோடுகிறது – நளின் பண்டார எம்.பி

editor

எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரிப்பு – 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் அதிக ஆபத்தில்

editor