சூடான செய்திகள் 1

மாணவர்களுக்கு இரும்பு அடங்கிய உணவை வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்களுக்கு இரும்பு மற்றும் போலிக் அமிலம் அடங்கிய உணவு வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான இணை அனுசரணை கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் ஆகியன இணைந்து வழங்கவுள்ளது.

மேலும் இந்தத் திட்டம் தற்போது தம்புத்தேக கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுவமதாக விவசாய அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களே, போஷாக்கு குறைந்தவர்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவற்துறையினர்…