சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மேல் , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலி மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

Related posts

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம்

மஹிந்தவை தோற்கடித்த சக்தி எது? மஹிந்த சொல்லும் கதை