சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும்

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவும் எனவும் சில இடங்களில் 100மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

இடிமின்னல் மற்றும் தற்காலிக கடும் காற்று என்பவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

நடுவானில் தடுமாறிய விமானம்:நிலை பதட்டமடைந்த விமானிகள் (video)

(VIDEO)”பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை”

பௌத்தர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய ஆணைக்குழு நியமனம்