உள்நாடு

மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி

(UTV | பாணந்துறை) – நாட்டில் மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த தொழிற்சாலையில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பாணந்துறை – ஹொரன மார்க்கத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 80 பேருகே இவ்வாறு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பாணந்துறை நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில், அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஏனைய ஊழியர்களும் பீ.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவர்களில் 80 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதிவுத் திருமணம் தொடர்பிலான அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor

ராஜித தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு