உள்நாடுபிராந்தியம்

மனைவியைத் தீ வைத்துக் கொன்ற கணவர் – வெல்லம்பிட்டியில் சோக சம்பவம்

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானதாகக் கூறப்படும் கணவர், தனது மனைவிக்கு தீ வைத்து கொன்று விட்டு, தனது நான்கு வயது குழந்தையை கூரையில் வைத்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து வெல்லம்பிட்டி பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் வெல்லம்பிட்டியின் லஞ்சியாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கணவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பலியானவர் துஷாரி என்ற 29 வயது பெண்.

பெண்ணின் கணவர் வீட்டின் கூரை மீது ஏறி, கூரையிலிருந்து ஷீட்டை அகற்றி, வீட்டுக்குள் நுழைந்து, தனது மனைவியின் தலையில் பெற்றோல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் சந்தேக நபர் தனது குழந்தையை எடுத்துக் கொண்டு கூரையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றமை பின்னர் தெரிய வந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும், சந்தேக நபர் அந்தப் பெண்ணைக் கொலை செய்வதாக பலமுறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, சந்தேக நபருக்கு எதிராக அவர் பொலிஸில் பல முறைப்பாடுகளை அளித்துள்ளார்.

இந்தச் சந்தேக நபர் கடுமையான ஐஸ் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாகவே அந்தப் பெண் சந்தேக நபருக்கு எதிராக விவாகரத்து வழக்குத் தொடர்ந்திருப்பது தெரிய வந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபர் போதைப்பொருள் வாங்குவதற்காக அந்தப் பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்பதும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்வதற்கு முன்பு சந்தேக நபர் வீட்டின் நீர் விநியோக அமைப்பையும் துண்டித்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பாத்திமா ஆய்ஷா : பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை

பாதாள உலக குழுவினருக்கான கடவுச்சீட்டில் இவ்வளவு மோசடியா?

சமூக ஊடகங்கள் மூலம் ஊழல்களை கண்காணிப்பு முறைமையொன்று அவசியம்- வஜிர அபேவர்தன.