அரசியல்உள்நாடு

மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுரவை வரவேற்கும் பதாகைகளை அகற்றிய பொலிஸார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை (12) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் வருகையை அறிவிக்கும் பதாகைகள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது எனும் அடிப்படையில் புதன்கிழமை (09) இரவு மாவட்ட பொலிஸாரினால் பதாகைகள அகற்றும் பணிணகள் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.சுபியான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலக தேர்தல் கண்காணிப்பு குழு உயர் அதிகாரிகளும் குறித்த இடத்துக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நிலையான சட்டங்களும் நிரந்தரத் தேசியக் கொள்கையும் அவசியமாகும்

மட்டக்களப்பு பாசிக்குடாவில் ஹோட்டல் என்ற பெயரில் விபச்சார விடுதி – மூன்று பெண்கள் கைது

editor

IGP தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனுக்கள் விசாரணை!

editor