உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருளுடன் கைதான பெண் உட்பட மூவர் நிந்தவூர் பொலிஸாரால் விசாரணை!

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை(24) மாலை  சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  பெண் உட்பட மூன்று  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது விசேட அதிரடிப் படையினருடன்   நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸாரும்  இணைந்து இவர்களைக் கைது செய்தனர்.

27 ,32  வயதுக்கு உட்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப் பொருட்கள் ஒரு தொகுதி மீட்கப்பட்டதுடன் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கைதான சந்தேக நபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-பாறுக் ஷிஹான்

Related posts

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

அரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்

ரஞ்சனின் இரண்டாவது வழக்கு ஒத்திவைப்பு