உள்நாடு

போதைப்பொருளுடன் இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

12 கிலோகிராம் 160 கிராம் குஷ் ரக போதைப் பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போதே இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22,42,43 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts

நாமல் எம்.பிக்கு எதிரான கிரிஷ் வழக்கை அழைக்க திகதியிடப்பட்டது

editor

அரசியல்வாதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

தேங்காய்களை வாங்க நீண்ட வரிசை

editor