உள்நாடு

போதைபொருட்களுடன் நால்வர் கைது

(UTV|கொழும்பு) – கொழும்பு குற்றவியல் பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரேன்பாஸ் பகுதியில் 05 கிராமுக்கும் அதிக ஹெரோயினுடன் 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, பழைய விமான நிலைய வீதி சந்தியில் 05 கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், இரத்மலானை பிரதேசத்தில் 02 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள், மாளிகாகந்த, கல்கிஸ்ஸ மற்றும் மொரடுவை நீதவான் நீதிமன்றங்களில் இன்று (17) முற்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

கொழும்பு – இராஜகிரியில் தீ விபத்து

editor

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கைது

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு