உள்நாடு

பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடு முடக்கப்படாது

(UTV | கொழும்பு) –  அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய வைரஸ் பரவிக்கொண்டு வருகின்ற நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுமா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும, “நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய விடயங்களை கவனத்தில் கொண்டு, நாட்டை முடக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“வைரஸ் தொற்றுவதை தவிர்ப்பதற்காக, சுகாதார வழிகாட்டல்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் – கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.

editor

துறைமுக நகரானது அரசியல் யாப்பிற்கு முரணானதா? [VIDEO]