சூடான செய்திகள் 1

பொது மக்களுக்கு வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள கோரிக்கை

(UTV|COLOMBO) வானிலை அவதான நிலையம்  எதிர்வரும் 5 மணித்தியாலங்களில் வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

மேற்படி மழையுடன் 70 – 80 கிலோ மீற்றர் வரையில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் , தொலைப்பேசிகள்  மற்றும் மின்சார உபகரணங்கள் போன்று திறந்த வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

 

 

 

Related posts

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு

ஜப்பான் நகர அபிவிருத்தி திட்டமிடல் முறைமையில் கண்டி நகரம் அபிவிருத்தி

சுதந்திர கட்சியின் மே தின கூட்டமும் இரத்து…