உள்நாடு

பொதுமக்கள் அவசரகால நிலை : நாளை விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

இவ்வாறு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் பின்னணியில் உள்ள காரணம் மற்றும் அதனூடாக வெளிப்படுத்தப்படும் விடயம் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிரிஹானயிலுள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் ஏற்பட்ட சம்பவம் அடுத்து நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 20 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு மேலும் 29 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம்

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி

தேசியப் பட்டியல் உறுப்பினராக என்னை நியமித்ததற்கு 99 வீதமானவர்கள் ஆதரவு – ரவி கருணாநாயக்க

editor