உள்நாடு

பொதுமக்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்களை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமையான செயற்பாடுகளுக்காக, பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியே பயணிக்க வேண்டும்.

இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், எதிர்வரும் 17 ஆம் திகதி வெளியே செல்ல முடியும் என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

வீடியோ | உலமா சபையுடன் நாமல் பேசியது என்ன.? உலமா சபையின் விளக்கம்

editor

மித்ர விபூஷண விருது வழங்கப்பட்டது எனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

editor

இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு