உள்நாடுபிராந்தியம்

பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு

பல்லேகலை, குண்டசாலை புதிய நகர பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலை அடுத்து, அதனை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் சுமார் 70 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகிறது.

சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மஹிந்த, மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு!

“ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்”

புதிய அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று

editor