உள்நாடு

பேருந்து சேவை மீண்டும் குறைகிறது

(UTV | கொழும்பு) – நாளை (26) முதல் தனியார் பஸ் சேவை 50 வீதத்திற்கு மேல் குறையலாம் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி உருவாகி வருவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோவில் இருந்து சரியான முறையில் டீசல் சப்ளை செய்யப்படவில்லை என்றும், இன்று பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தென் மாகாணத்தில் இன்றும் பல பேருந்துகள் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து உடனடி பதிலை எதிர்பார்ப்பதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நிந்தவூரில். மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை! தற்காலிய வியாபாரி சிக்கினார்

editor

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள்