உள்நாடு

புற்றுநோய் எதிர்ப்பு போத்தல்களுக்கு வருகிறது தடை

(UTV | கொழும்பு) – புற்றுநோய் காரணிகள் அடங்கிய போத்தல்களுக்கு தடை விதித்து சட்டவிரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குனகொலபெலஸ்ஸவில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இதுபற்றி முழு ஆய்வை மேற்கொள்ளுமாறு எங்கள் அமைச்சகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். எமது நாட்டில் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பிற்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்படுவோம். புற்றுநோய் காரணிகள் அடங்கிய போத்தல்களில் மேற்கொள்ளப்படும் சோதனை முடிவுகளின் அடிப்படையில், அவற்றை தடை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது ஒரு துரதிஷ்டவசமான நிலை. இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை நம் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. இது தொடர்பில் சுற்றாடல் அதிகார சபைக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன். இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் அவற்றை தடைசெய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படும்..

விசாரணை முடிவுகள் கிடைத்தவுடன், அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் என்ற ரீதியில், உயர்மட்ட விவாதம் நடத்தி, இதையெல்லாம் தடுத்து நிறுத்தி, நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இது தொடர்பாக சட்ட விரோதமாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்..”  எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு

பேருவளை நகர சபையின் மேயர் தெரிவு – NPP க்கு ஆதரவளித்த SJB யின் ஆறு பேர் இடைநிறுத்தம்

editor

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

editor