உள்நாடு

புதையல் தோண்டிய ஐவர் கைது

(UTV|கொழும்பு) – சட்டவிரோதமாக புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக ஹொரண, மாலொஸ்எல பகுதியில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும், பூஜைக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களை ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Related posts

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சூரியகாந்தி எண்ணெய் நன்கொடை!

“அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதால் இராஜினாமாவுக்கு அவசியமில்லை”

முத்துராஜவெல ஈரவலயத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க அமைச்சரவை அனுமதி