உள்நாடு

பிரியந்த குமாரவின் சடலத்துடனான விமானம் இன்று மாலை இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் இலங்கைக்கு இன்று எடுத்து வரப்படவுள்ளது.

அவரது சடலம் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 186 என்ற விமானத்தின் ஊடாக இன்று எடுத்து வரப்படவுள்ளது.

அதனடிப்படையில் குறித்த விமானம் லாஹூரில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்கு வௌியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானம் மாலை 5 மணி அளவில் இலங்கையை வந்தடையும் என வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்

இலங்கைக்கு கடத்த இருந்த பொருட்களை பொலிஸார் பறிமுதல்!

Update – உழவு இயந்திர விபத்து – இதுவரை 08 சடலங்கள் மீட்பு

editor