உள்நாடு

பிரதம நீதியரசர பதவிக்கு பத்மன் சூரசேனவுக்கு அங்கீகாரம்!

அடுத்த பிரதம நீதிபதி பதவிக்கு பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் அரசியலமைப்பு சபைக்கு பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரை சமர்ப்பித்தார்.

அதன்படி, இன்று (23) நடைபெற்ற அரசியலமைப்பு சபை கூட்டத்தில் இது அங்கீகரிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் சிரேஷ்ட நீதிபதிகளில் ஒருவரான பிரீதி பத்மன் சூரசேன, முன்னர் நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இதேவேளை, தற்போதைய பிரதம நீதிபதி முர்து பெர்னாண்டோ இந்த மாதம் 27 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

Related posts

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிய நபர் – இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம்

editor

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக மட்டக்களப்பு இளைஞன்!

பரிதவித்த மக்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தவே முல்லைத்தீவில் கால் பதித்தோம் -ரிஷாட்