அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கு கொலை மிரட்டல் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல்

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு மின்னஞ்சல் பிரதமர் அலுவலகத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளார்,

மேலும் அந்த மின்னஞ்சல் தொடர்பாக கூகிளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்துள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

மின்னஞ்சலின் ஐபி முகவரி நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

‘Pandora Papers’ : உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளவும்

அரிசி தட்டுப்பாடு – ஜனவரி 10 ஆம் திகதி வரை இறக்குமதி செய்ய தீர்மானம்

editor

பட்டதாரிகளுக்கான அறிவித்தல்